வறுமைகோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்களுக்கு தான் உதவித்தொகை -அமைச்சர் ஜெயக்குமார்

வறுமைகோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்களுக்கு தான் உதவித்தொகை வழங்குகிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-11 13:45 GMT
சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தியாவில் தொழில் நல்லுறவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. பயத்தின் வெளிப்பாட்டால் தான் ஏழைகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை திமுக எதிர்க்கிறது.

8 வாரத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதி இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல்ஆணையம் தான் முடிவு செய்யவேண்டும்.

வறுமைகோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்களுக்கு தான் உதவித்தொகை வழங்குகிறோம். தொழில், தொழிலாளர்கள் நல்லுறவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்