முதல் அமைச்சர் பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவர்: தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவராக இருக்கிறார் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-02-15 14:06 GMT
சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவராக இருக்கிறார் என பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவால்களையும், சதிகளையும் கடந்து பல நல்ல திட்டங்களை முதல் அமைச்சர் பழனிசாமி கொண்டு வந்துள்ளார் என புகழாரம் சூட்டியுள்ளார். மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தந்து பல சோதனைகளை சாதனையாக்கி 3 ஆவது ஆண்டில் தொடரும் முதல் அமைச்சருக்கு எனது வாழ்த்துக்கள் என அவர் வாழ்த்தியுள்ளார்.

மேலும் செய்திகள்