எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இராமேஷ்வரம்,
கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 3 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் ராமநாதபுரம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன. காங்கேசன் துறைமுகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.