எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Update: 2019-02-21 02:41 GMT
இராமேஷ்வரம்,

கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள்  13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின்  3 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. 

இவர்கள் ராமநாதபுரம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.  காங்கேசன் துறைமுகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்