தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருந்தால் பேசுவோம்; கமல்ஹாசன் பேட்டி
தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருந்தால் பேசுவோம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் இன்று பேசினார்.
ரஜினியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் என கூறினார்.
கருத்து வேறுபாடுள்ள கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என கூறிய அவர், வருகிற 28ந்தேதி முதல் 7ந்தேதி வரை விருப்ப மனு பெற்று கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தில் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். கூட்டணிக்காக சிலர் எங்களை அணுகினார்கள். தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருந்தால் பேசுவோம் என அவர் கூறியுள்ளார்.