சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள்: இன்று முதல் 3 நாட்கள் இயக்கம்

வார விடுமுறை, முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

Update: 2024-04-26 00:00 GMT

கோப்புப்படம்

சென்னை,

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக இன்று (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம், நாளை (சனிக்கிழமை) மற்றும் 28-ந்தேதி (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 280 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 355 பஸ்களும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக இன்று 280 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 355 பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து 55 பஸ்களும் இந்த இடங்களில் இருந்தும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்