திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு என அறிவிப்பு
திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை,
திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான பிரதான வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வெளியிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், வழக்கை சுட்டிக்காட்டி திருப்பரங்குன்றம் தேர்தலை அறிவிக்காதது தவறு எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.