பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு, சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு
பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு, சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.
சென்னை:
சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சரத்குமாரிடம் ஆதரவு கோரியதை அடுத்து இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு, சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சரத்குமார் கூறியதாவது:-
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வேன் என கூறினார்.