போலீசாரை தரக்குறைவாக பேசியதாக தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது வழக்கு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நேற்று காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி அருகே பிரசாரம் செய்வதற்காக தி.மு.க.வினர் கூடியிருந்தனர்.

Update: 2019-04-14 19:15 GMT
காஞ்சீபுரம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நேற்று காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி அருகே பிரசாரம் செய்வதற்காக தி.மு.க.வினர் கூடியிருந்தனர். அப்போது, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காந்திரோடு தேரடி அருகே ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தருவதாக இருந்தது. போலீசார் தங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு துணை முதல்–அமைச்சர் வர அனுமதிப்பதா? என்று கூறி தேரடி அருகே திடீரென காஞ்சீபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க.வினர் போலீசாரை தரக்குறைவாக திட்டியதாக தெரிகிறது. இது குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம், எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்