ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

Update: 2019-06-12 12:09 GMT
சென்னை,

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி  சென்னை ராஜ்பவனில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் மீது காலம் தாழ்த்தக் கூடாது எனவும், புதிய  தலைமைச்செயலாளர் மற்றும் டிஜிபி தொடர்பாகவும் பல்வேறு முக்கிய  விவகாரங்கள் குறித்தும் ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்