"கடந்த ஆண்டை விட மீன்வரத்து குறைவு" - முகத்துவாரத்தை தூர்வார மீனவர்கள் கோரிக்கை

மீன்பிடி தடைகாலம் முடிவடைந்ததையடுத்து கடந்த திங்கள் கிழமை கடலுக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பினர்.

Update: 2019-06-21 09:59 GMT
சென்னை,

மீன்பிடி தடைகாலம் முடிவடைந்ததையடுத்து கடந்த திங்கள் கிழமை கடலுக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பினர். மீனவர்கள் கொண்டு வந்த சுறா , பாறை, மத்தி உள்ளிட்ட மீன்களை வியாபாரிகளும், மீனவர்களும் போட்டிப்போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர். 

பொதுவாக 5 நாட்களில் 5 ஆயிரம் கிலோ மீன்கள் வரை கிடைக்கும் எனவும், ஆனால் தற்போது 3 ஆயிரம் கிலோ மீன்களே கிடைத்ததாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். முகத்துவார பகுதிகளை தூர்வாரினால் மீன்வளம் அதிகரிக்கும் எனவும் அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்