பழனி முருகன் கோவில் கடைகளை ஏலம் விட இடைக்காலத்தடை

பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 61 கடைகளை ஏலம் விட இடைக்காலத்தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-06-26 11:29 GMT
மதுரை,

பழனி கோவில் வாடகை கடைகளின் உரிமையாளர்கள் சுரேஷ்பாபு, லட்சுமணன் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.  அந்த மனுவில்  எந்தவித முன்னறிவிப்பின்றி கடைகளை ஏலம்விட கோவில் நிர்வாகத்தினர் ஆயுத்தமாகி வருவதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு பின் பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 61 கடைகளை ஏலம் விட இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது. இந்த  வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்