ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வந்தது 25 லட்சம் லிட்டர் குடிநீர்
ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் குடிநீர் ரெயில் மூலமாக சென்னையை வந்தடைந்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் நிரப்பப்பட்ட வேகன்கள் அடங்கிய ரெயில் ஜோலார்பேட்டையில் இருந்து இன்று காலை புறப்பட்டது. ரெயிலை குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் மகேஷ்வரன் தொடங்கி வைத்தார். ரெயில் புறப்படுவதற்கு முன் பூஜைகளும் செய்யப்பட்டன. இதனையடுத்து, ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட ரெயில் சென்னை வில்லிவாக்கத்தை வந்தடைந்தது.
இந்நிலையில், சென்னை வில்லிவாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வேலுமணி, ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர் கீழ்ப்பாக்கம் குடிநீர் நிலையத்தில் சுத்திகரிக்கப்படும்.
பின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது லாரிகள் மூலமாக சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.