வேளச்சேரி-சென்னை கடற்கரை: இருமார்க்கத்திலும் மதியம் 2.10 மணி வரை ரெயில்கள் ரத்து
வேளச்சேரி-சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரெயில்கள் மதியம் 2.10 மணி வரை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகின்றன.
வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரையிலான பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணிகளில் இன்று ஈடுபடுகின்றனர்.
இதன் காரணமாக வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரையிலான இருமார்க்கத்திலும் மதியம் 2.10 மணி வரை ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.