தூத்துக்குடியில் வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி

தூத்துக்குடி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர்.

Update: 2019-07-17 23:20 GMT
தூத்துக்குடி,

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

திருநெல்வேலி - திருச்செந்தூர் ரோட்டில் செய்துங்கநல்லூர் அருகே கருங்குளம் என்ற இடத்தில் சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் பயணம் செய்த ஜெகதீஸ்வரன் (12), அருணாசல பாண்டி (35), முத்துலட்சுமி (65), பாக்யலட்சுமி (46), நித்தீஷ் (4), அனீஸ்பாண்டி ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்