தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் -தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் அதிக கொலைகள் நடைபெற்று வருகிறது, அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளிள் அதிக கவனம் செலுத்தி, அசாதாரண சூழலை தடுக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னை
தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை தருகிறது என்றும் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் செல்கிறார்கள் என்றும் இதனை சரி செய்ய காவல்துறை இன்னும் அதிக கவனம் செலுத்தி அசாதாரண சூழலை தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தமிழ் முதுமொழி, எல்லோராலும் அறியப்பட்ட மொழி என்றும், இந்தியை யாரும் திணிக்கவில்லை, மத்திய அரசுக்கு இந்தியை திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.