சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை

சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

Update: 2019-07-25 01:11 GMT
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாக, கிழக்கு கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.  சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.

இதனிடையே சென்னை நகர், புறநகர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் லேசான தூறலும், பின்னர் கனமழையும் பெய்தது.

நேற்று இரவு முதல் பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும், இதேபோன்று ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

மேலும் செய்திகள்