சென்னை மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ விபத்து

சென்னை மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2019-08-01 03:23 GMT
சென்னை, 

சென்னை மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது அலுவலகத்தின் 4 தளங்களிலும் பரவியுள்ளது. காலை 5 மணிக்கு ஏற்பட்ட இந்த தீ விபத்தானது மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

 5 வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுக்க புகை மூட்டமாக காணப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால், பணியாளர்கள் யாரும் இல்லாத நிலையில் யாருக்கும் பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது.  

மேலும் செய்திகள்