கருணாநிதி நினைவு தினம்; தி.மு.க. சார்பில் அமைதி பேரணி தொடங்கியது

முன்னாள் முதல் மந்திரி கருணாநிதி நினைவு தினத்தினை முன்னிட்டு சென்னையில் தி.மு.க. சார்பில் அமைதி பேரணி தொடங்கியது.

Update: 2019-08-07 03:13 GMT
சென்னை,

முன்னாள் முதல் மந்திரி மற்றும் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி கடந்த வருடம் ஆகஸ்டு 7ந்தேதி காலமானார்.  அவரது முதல் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு சென்னையில் தி.மு.க. சார்பில் இன்று அமைதி பேரணி நடைபெறுகிறது.

சென்னையில் வாலாஜா சாலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த பேரணி தொடங்கியது.  இதில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான பொருளாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எம்.பி.க்களான கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்