விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அக்.21 ஆம் தேதி பொதுவிடுமுறை

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் காரணமாக வரும் 21-ம் தேதி பொதுவிடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-10-17 10:32 GMT
சென்னை,

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன.

இந்த தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வருகிற 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதனையொட்டி இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்