ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு மேலும் 4 மாதங்கள் அவகாசம் நீட்டிப்பு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு மேலும் 4 மாதங்கள் அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-10-24 12:08 GMT
சென்னை,

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். இதனால் ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று 2017 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது

2017ஆம் ஆண்டு முதல் விசாரணை செய்து வரும் இந்த ஆணையத்தின் கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில்,  ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை ஆணையம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தற்போது விசாரணைக்கு இடைக்கால தடை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்