ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல் அமைச்சர் பழனிசாமி சந்திப்பு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வருகிறார்.
சென்னை,
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று தகவல்கள் கூறுகின்றன.
ஆளுநர் - முதல்வர் இடையேயான சந்திப்பு சுமார் அரைமணி நேரம் வரை நீடித்தது. இந்த சந்திப்பின் போது, டிஜிபி திரிபாதி, தலைமைச்செயலாளர் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.