மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கடந்த இரண்டு நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர்,
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 14,784 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 14,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் 119.11 அடியாக உள்ளது. மேலும் அணையில் தற்போது 92.58 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.