11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-11-16 13:06 GMT
சென்னை,

வானிலை மையத்தின் தென்மண்டல துணைத்தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணாக, நாளையும், திங்கட்கிழமையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்தார். வெப்பச்சலனம் காரணமாக வட மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்