எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி பழனிசாமி - துரைமுருகன் கடும் தாக்கு
அரசியல் வாழ்க்கை தொடங்கியது முதல் கொடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி பழனிசாமி என்று திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை,
ஸ்டாலினுக்கு பாவமன்னிப்பு கிடையாது என முதலமைச்சர் பழனிசாமி கூறியதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியதாவது:-
அரசியல் வாழ்க்கை தொடங்கியது முதல் கொடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி பழனிசாமி. பொதுவாழ்க்கையில் நேர்மையும், தூய்மையும் உள்ளோர் தான் பாவ, புண்ணியம் பற்றி பேச வேண்டும்.
மறைமுகத்தேர்தல் என்பது ஒருநாள் இரவில் உதயமானதற்கு என்ன காரணம்? தோல்வி பயம் தானே? என கேள்வி எழுப்பி உள்ளார். இதனையடுத்து உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்காமல், மாவட்டத்தை 2 ஆக பிரித்து புதிய பெயரைச் சூட்டிவிட்டாலே பெரிய சாதனையாக நினைத்துக் கொள்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.
இவ்வாறு அவர் கூறினார்.