தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-11-27 08:57 GMT
சென்னை,

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

காஞ்சீபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்