நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் உள்நோக்கம் இல்லை - பொன் ராதாகிருஷ்ணன்

நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் உள்நோக்கம் இல்லை என முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-10 10:39 GMT
சென்னை,

சென்னையில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நடிகர் விஜய் வீட்டில்  நடைபெற்ற வருமானவரி சோதனையில் உள்நோக்கம் இல்லை. பாஜகவுக்கும், வருமானவரி சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எதிர்க்கட்சிகளின் கருத்து தவறானது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்