சென்னையில் பிப்ரவரி 28-ம் தேதி வரை போராட்டம், ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி, பொதுக்கூட்டம் நடத்த தடை
சென்னையில் இன்று முதல் பிப்ரவரி 28 வரை போராட்டம், ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி, பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில்,
சென்னையில் 14-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்கள், போக்குவரத்து பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் போன்றவற்றை நடத்த தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.