சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி

சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் வந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகிறது.

Update: 2020-02-19 09:55 GMT
சென்னை

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,000ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 132 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்த 19 பேரை சோதனை செய்ததில் 2 பேருக்கு கொரோனா வைரஸ்  அறிகுறி இருப்பது தெரியவந்து உள்ளது. 

கொரோனா அறிகுறிகளுடன் வந்தவர்கள்  கிண்டி கிங்ஸ் மருத்துமனைக்கு அனுப்பட்டு தனிமைப்படுத்தி கண்காணிக்கபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்