சட்டப்பேரவையில் முதலமைச்சர் - எதிர்க்கட்சித் துணைத்தலைவர் காரசார விவாதம்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி - எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சென்னை
சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் 7 பேர் விடுதலை விவகாரத்தில் இனி கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டும்; கவர்னரின் அதிகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது என கூறினார்.
முதல்வர் பழனிசாமி கூறும் போது 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார் என கூறினார்.
துரைமுருகன் தமிழக அரசின் கடன் நான்கரை லட்சம் கோடி ரூபாயாக கொண்டு வந்திருக்கிறீர்களே; நாளை நாங்கள் ஆட்சிக்கு வரும்போது எங்கள் தலைவர் என்ன செய்வார் என கவலைப்படுகிறோம் என கூறினார்
முதல்வர் பழனிசாமி உங்களுக்கு அந்த கவலை தேவையில்லை. அப்படி ஒரு நிலை வராது என பதில் அளித்தார்.