மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல்ஹாசன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் ரத்து

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழாவில் கமல்ஹாசன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் மட்டும் ரத்து செய்யப்படுகின்றன.

Update: 2020-02-21 01:30 GMT
சென்னை, 

மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சிகள் 21-ந் தேதி (இன்று) நடைபெற இருந்தது. இதில் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் மட்டும் ரத்து செய்யப்படுகின்றன.

கமல்ஹாசன் கலந்துகொண்ட படப்பிடிப்பு தளத்தில் நடந்த துயர சம்பவம் காரணமாக அவர் கலந்துகொள்ள இயலவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்