சென்னை விமான நிலையத்தில் ஜப்பான், தென் கொரிய பயணிகளுக்கு தடை

சென்னை விமான நிலையத்தில் ஜப்பான், தென் கொரிய பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய குடியுரிமைத்துறை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-02-27 21:00 GMT
சென்னை, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. 

ஆனால், ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் இருந்து வரும் வழக்கமான பயணிகளுக்கான விசாவுக்கு(தொழில், படிப்பு) மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்படுகிறது. 

அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த நிலை தொடர வேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்