பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் கோரிக்கை

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-03-22 23:15 GMT
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முகநூல்(பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்திருப்பது கொரோனா அச்சுறுத்தலை அ.தி.மு.க. அரசு அலட்சியப்படுத்துகிறதோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்புடன் அ.தி.மு.க. அரசு விபரீத விளையாட்டு நடத்துவது கவலைக்குரியது மட்டுமின்றி, கடும் கண்டனத்திற்கும் உரியது.

ஆகவே மாணவர்கள் நலன்கருதி பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்