இந்தோனேசியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களுக்கு மீட்பு உதவிகள் - பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இந்தோனேசியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களுக்கு மீட்பு உதவிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-03-29 22:45 GMT
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்தோனேசியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்கள், தமிழ்நாட்டுக்கு திரும்பிவர விரும்பும் தகவல் எனக்கு கிடைத்தது. அவர்கள் பத்திரமாகவும், நலமாகவும் வீடு திரும்ப பிரதமரும், தமிழக முதல்-அமைச்சரும் உடனடியாக மீட்பு உதவிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்