சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம்- தமிழக அரசு

சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Update: 2020-04-26 16:03 GMT
சென்னை,

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்த ஜூன் 30- ஆம் தேதி வரை அவகாசம் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

மார்ச் 31-க்குள்  கட்ட வேண்டிய  சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றிற்கு  3 மாதம் அவகாசம் அளித்து, அதாவது ஜூன் 30- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்