பவானிசாகர் அணையில் இருந்து நாளைமுதல் ஜூலை 28ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
பவானிசாகர் அணையில் இருந்து நாளைமுதல் ஜூலை 28ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
பவானிசாகர் அணையில் இருந்து நாளைமுதல் ஜூலை 28ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
இந்நிலையில் வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு 1.7.2020 முதல் 28.10.2020 வரை தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.