சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 24 பேர் உயிரிழப்பு என தகவல்

சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2020-07-03 05:43 GMT
சென்னை,

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் கொரோனா பரவல் வேகம் கட்டுக்குள் வந்தபாடில்லை. 

இந்த நிலையில், தலைநகர் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மட்டும்  கொரோனா பாதிப்பால் 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8, ஸ்டான்லி மருத்துமனையில் 6, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 4, ஓமந்தூரார் மருத்துவமனையில் 3, தனியார் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்