சென்னையில் மொத்தம் 20,271 பேருக்கு கொரோனா சிகிச்சை
சென்னையில் மொத்தம் 20,271 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை,
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 73,728 ஆக உள்ளது.
இந்நிலையில் சென்னையில் தற்போது 20,271 பேர் பேர் மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் மண்டலத்தில் 2553 பேர்
அண்ணா நகர் - 2,236 பேர்
தேனாம்பேட்டை-2,036 பேர்
ராயபுரம் மண்டலத்தில் - 1,582 பேர்
தண்டையார்பேட்டை-1,522 பேர்
திரு.வி.க. நகர்- 1,538 பேர்
அம்பத்தூரில் 1,243 பேர்
வளசரவாக்கத்தில் 1,051 பேர்
அடையாறு 1,263 பேர்
திருவொற்றியூரில்-957 பேர்
மாதவரம்-712 பேர்
மணலியில் 369 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.