கொரோனா பாதிப்பு: சென்னையில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி மரணம்

மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருமூர்த்தி கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார்.

Update: 2020-07-14 03:08 GMT
சென்னை

சென்னை மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருமூர்த்தி கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 26ம் தேதி குருமூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்50 வயதான குருமூர்த்திக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். எஸ்.ஐ. குருமூர்த்தி மரணத்தை தொடர்ந்து சென்னை காவல்துறையில் போலீசார் உயிரிழப்பு 4ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்