மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு - தமிழக அமைச்சரவை ஒப்புதல்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Update: 2020-07-14 13:12 GMT
சென்னை,

தமிழக அமைச்சரவைக் கூட்டம் , முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் துவங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்,  தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள புதிய தொழில்கள், பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள் மற்றும் கொரோனா தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு பணி குறித்தும், ஊரடங்கு தளர்வுகள்  ஆகியவை விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி,  மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவிதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், ரூ.5 ஆயிரம் கோடியில் முதலீடு செய்யும் 6 நிறுவனங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் செய்திகள்