செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 337 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இதுவரை 337 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2020-07-19 10:39 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி இதுவரை 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரானா பாதிப்பு எண்ணிக்கை 9,697 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 6,845 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 186 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் தற்போது 2,328 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்