ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2020-07-21 10:27 GMT
தர்மபுரி,

கர்நாடக மாநிலத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது,

இதனை தொடர்ந்து ஒகேனக்கல் அருவியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும் செய்திகள்