சென்னையில் குறையும் கொரோனா மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை -முதல்வர் பழனிசாமி

சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் எட்ப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2020-07-30 06:45 GMT
சென்னை

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் சென்னையில் தான் முதலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது தற்போது பிற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையிலும் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர்

அரசின் விரைவான நடவடிக்கைகளால் சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது. இதுவரை 14 லட்சம் பேர் காய்ச்சல் முகாம்களால் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் இலவச முக கவசம் வழங்கப்படுகிறது. அதிக பரிசோதனை கூடங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான்.இந்தியாவிலேயே 25,36,660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன என கூறினார்.

கூட்டத்திற்கு பின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில்  சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மேலும் செய்திகள்