புதுச்சேரியில் இன்று 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் இன்று 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-15 07:25 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புதுச்சேரியில் இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் இதுவரி 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,355 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 1,853 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் 1,172 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதுவரை 106 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை முடிந்து இன்று 215 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,224 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்