சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்-சீமான்

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-16 06:53 GMT
சென்னை,

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் முழுவதும் அவரவர் வீடுகளின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், “  இந்தி, இந்தியா என்ற கட்டமைப்பிற்காக திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

இந்தியை போல் தமிழையும் நாடெங்கும் படிக்க சொல்வார்களா?  இந்தி வந்தால் பிளவு வரும் . இந்தி, சமஸ்கிருதத்தை படிக்கச் சொல்பவர்கள் தமிழை படிக்கச் சொல்ல மறுப்பது ஏன்? சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும், நானும் போட்டியிடுவேன்” என்றார். 

மேலும் செய்திகள்