கோவாக்சின் மருந்தை பரிசோதனை செய்து வருகிறோம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

கோவாக்சின் மருந்தை பரிசோதனை செய்து வருகிறோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-04 08:28 GMT
சென்னை,

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தளர்வுகள் இருந்தாலும் நோய் பரவலை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டமான இடங்களில் தனி மனித இடைவெளி அவசியம். கோவாக்சின் மருந்தை பரிசோதனை செய்து வருகிறோம்.

அரசு மருத்துவமனை மற்றும் ஒரு தனியார் மருத்துவமனைகளில் 300 பேருக்கு பரிசோதனை செய்ய இருக்கிறோம். சித்தா, ஆயுர்வேத மருந்துகளையும் ஐ.சி.எம்.ஆர். ஒப்புதலுடன் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்