“புதிய அரசியல் சமைப்போம்.வான்புகழ் தமிழகம் காண்போம்” - கமல்ஹாசன் டுவீட்

பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி 'பாரதியின் அக்கினிக் குஞ்சுகளாய் மாறி புதிய அரசியல் சமைப்போம்' என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Update: 2020-09-11 08:46 GMT
சென்னை,

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

சாவிலாக்கவி. நம் தமிழுடனும்,வாழ்வுடனும் நீக்கமறக்கலந்து விட்ட முண்டாசுக்காரரின்  பெருங்கனவை நனவாக்குவோம். அரசியலில் இளையோரானாலும்,தழல் வீரத்தில் குஞ்சென்றும்,மூப்பென்றும் இல்லை என்ற திரு.சுப்ரமணியபாரதியின் அக்கினிக்குஞ்சுகளாய் மாறி புதியஅரசியல் சமைப்போம்.வான்புகழ் தமிழகம் காண்போம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்