தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர்- தனியார் மருத்துவமனை

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Update: 2020-10-02 03:50 GMT
சென்னை,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கடந்த 22-ந் தேதி அவர் உடல்நல குறைவு காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில்  கொரோனா அறிகுறியுடன் இருப்பது தெரிந்தது.  இதையடுத்து, விஜயகாந்துக்கு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரும் மணப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்த நிலையில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்