திருப்பதியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நாளை தரிசனம் செய்கிறார்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று மாலை, சென்னையில் இருந்து திருப்பதிக்கு வந்தார்.

Update: 2020-10-09 17:22 GMT
திருமலை,

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று மாலை, சென்னையில் இருந்து திருப்பதிக்கு வந்தடைந்தார். திருப்பதியில் இருந்து, அலமேலு மங்காபுரம் சென்ற அவர், அங்கு சாமி தரிசனம் செய்தார்.

இரவு திருமலையில் உள்ள விடுதியில் தங்கும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், நாளை காலை மேலும் 3 அமைச்சர்களுடன் சேர்ந்து ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.


மேலும் செய்திகள்