ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடனான முதலமைச்சர் பழனிசாமியின் சந்திப்பு திடீர் ரத்து

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடனான முதலமைச்சர் பழனிசாமியின் சந்திப்பு திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2020-11-23 11:57 GMT
சென்னை, 

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலானது கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க உள்ளதாகவும் இந்த சந்திப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடனான முதலமைச்சர் பழனிசாமியின் சந்திப்பு திடீர் ரத்து செய்யப்பட்டிருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்க ஆளுநரை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் இந்த சந்திப்பு திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்