நெல்லை சுத்தமல்லியில் பரபரப்பு: போலீசார் முன்னிலையில் தீக்குளித்து பெண் தற்கொலை
நெல்லை சுத்தமல்லியில் போலீசார் முன்னிலையில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
நெல்லை,
நெல்லை சுத்தமல்லியில் போலீசார் முன்னிலையில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரணம் இன்றி 2 மகன்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டிய அந்த பெண், தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.